விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ரி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியுள்ளது. 

இதில் ரி 20 தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதில் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐ.சி.சி அபராதம் விதித்திருந்தது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் மெதுவாக பந்து வீசியது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு ‘ஹெட்ரிக்’ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *