உள்நாடு

மாஹோ – ஓமந்தை ரயில் பாதையினை திறந்து வைத்தார் மோடி

அநுராதபுரத்தில், மாஹோ- ஓமந்தை இடையேயான மேம்படுத்தப்பட்ட ரயில் பாதையினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நரேந்திர மோடியும் இணைந்து அங்குரார்ப்பணம் செய்துவைத்துள்ளனர்.

மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான தொகுதிக்குரிய நவீன சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு பொறிமுறையினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட சமிக்ஞை தொகுதி திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்தி பயணத்தின் பல்வேறு அம்சங்களிலும் இலங்கைக்கான ஆதரவை நல்குவதில் இந்தியா பெருமிதம் கொள்கின்றது எனவும் மோடி தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *