உள்நாடு

அனுராதபுரம் சென்றடைந்தார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் அனுராதபுரம் நகரை சென்றடைந்துள்ளார்.

அங்கு ஜெய ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் புதிய ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை ரயில் பாதையையும் திறந்து வைக்கவுள்ளார்.

இதற்கிடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் வருகையை முன்னிட்டு இன்று அனுராதபுரத்தில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தை உத்தியோகபூர்வமாக முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் நாட்டைவிட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *