உள்நாடு

எல்லோருடனும் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறேன்; சவூதி தூதுவரின் பெருநாள் வாழ்த்து

இந்த அருள் நிறைந்த ஈத்அல் பித்ர் திருநாளில் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் மக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்தார்.

புனித ரமழானை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்த புனித நாளானது நம் அனைவருக்கும் புதிய ஆரம்பங்கள், உற்சாகம் மற்றும் அன்பை பரப்புவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்நாளில் உங்கள் எல்லோருடனும் என் மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நாம் அனைவரும் எதிர்காலத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெற்று, எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகள் மேலும் வலுவடையட்டும் என இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, அந்த ஒத்துழைப்பு இரு நாடுகளின் நன்மைக்கும் செழிப்புக்கும் வழிவகுப்பதாக அமையட்டும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *