ஷவ்வால் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் கூட்டம் இன்று
ஹிஜ்ரி 1446 ஷவ்வாள் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மார்ச் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின்
ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம் பெற இருக்கும் பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள் முஸ்லிம் சமயம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்ளின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)