உள்நாடு

சென்றல் கேம்ப் பவுண்டேஷன் சமூகசேவை அமைப்பின் இப்தார் நிகழ்வு

சென்ட்ரல் கேம் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பின் இப்தார் நிகழ்வு சென்ட்ரல் கேம் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் (25) இடம்பெற்றது.

சவுதி அரேபியாவில் வசிக்கும் அல் ஹாஜிரின் குடும்பத்தினரின் நிதி பங்களிப்பின் ஊடாக அங்கு பணி புரியும் நஜ்ஜாஸ் கபீர் என்பவரின் முயற்சியினால் சென்றல் கேம்ப் பவுண்டேஷன் சமூகசேவை அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் இப்தார் நிகழ்வில் சுமார் 600 ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

நிதி பங்களிப்பு செய்த குடும்பத்தினருக்காக நன்றி உரையினை மத்திய முகாம் ஸ்ரீ முருகன் பாடசாலையில் பிரதி அதிபர் கே.எல் ரியாஜ் அகமட் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நோன்பின் மாண்பு பற்றிய சிறப்பு பயானையும், விஷேட துவா பிரார்த்தனையும் மௌலவி.ரிபாஸ் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் சென்ட்ரல் கேம்ப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி.கே. பத்திரன மற்றும் சென்ட்ரல் கேம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் கே. இசுரு எரந்த கொடிகார ஆகியோர் கலந்து கொண்டதுடன் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *