டாக்டர் ரிஷாதுக்கு கெளரவம்
இலங்கையில் முதல் தடவையாக மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் மருத்துவ பேராசிரியராக முஸ்லிம் சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட டாக்டர் முஹம்மது ரிஷாதை கௌரவித்து சின்னம் ஒன்றை வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு “முவீன் பிக்” ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது AMYS நிறுவனத்தின் பணிப்பாளரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளருமான மௌலவி எம்.எஸ்.எம். தாஸீம் சின்னத்தை கையளிப்பதையும், கௌரவ பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி ஸாலி , முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் அருகில் இருப்பதையும் கீழுள்ள படத்தில் காணலாம்.
