மலேஷிய உயர் ஸ்தானிகராலயத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
வழமை போன்று இம்முறையும் இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகராலயத்தினால் புனித நோன்பை முன்னிட்டு நூற்றிற்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள் மற்றும் வருமானம் குறைந்த வறிய குடும்பங்களுக்கு இளம் முஸ்லிம் மாதர் அமைப்பின் ஏற்பாட்டில் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நேற்று (17) வழங்கி வைக்கப்பட்டது.
தெமடகொட வை.எம்.எம்.ஏ. தலைமைக் காரியாளலயத்தில் வைத்து இளம் முஸ்லிம் மாதர் அமைப்பிப்பின் தலைவி தேசமாண்ய பவாஸா தாஹா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மற்றும் மாலதீவு நாடுகளுக்கான மலேசிய உயர் ஸ்தானிகராலயத்தின் தூதுவர் பட்லி ஹிஸாம் ஆதம் மற்றும் திருமதி ஹிஸாம் ஆதம் ஆகியோர் கலந்து கொண்டு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அமைப்பின் செயலாளர் திருமதி சுரையா றிஸ்வி பொருலாளர் ஹனீஸ் மலிக் உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் அமைப்பின் ஆலோசகர் காலித் பாறுக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.








(ஏ.எஸ்.எம்.ஜாவித்)