வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்றை கல்நேவ பொலிசார் கண்டு பிடித்துள்ளனர்.
சந்தேக நபர் வசித்த கல்நேவ பகுதியில் உள்ள வீட்டில் (14)
கல்நேவ பொலிசார் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைக்குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வைத்தியரின் தொலைந்து போன கையடக்க தொலைபேசியை கண்டறியும் நோக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் (13) அனுராதபுரம் பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிசாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)