தேசபந்து தென்னக்கோன் உட்பட அறுவரை கைது செய்ய உத்தரவு.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.