உள்நாடு

கண்டி உடுதெனியவில் கொலை, கொள்ளை சம்பவம் ; சந்தேக நபர்கள் கைது.

அண்மையில் கண்டி உடுதெனிய வில் வீடொன்றிற்குள் புகுந்து 70 வயதுடைய சித்தி ஆபிதா என்ற 5 பிள்ளைகளின் தாயை மூச்சுத் திணற வைத்து கொலைசெய்து அந்த வீட்டிலிருந்து தங்கம் மற்றும் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர்கள் கண்டியைச் சேர்ந்த தலாத்துஒய பொலீஸாரின் வலையில் சிக்கியுள்ளனர்.

சந்தேகநபர்கள் 34, 36 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் அக்குறணை- மல்வானஹின்ன, மடவளை- கல்கெடியாவத்தை , மற்றும் உக்குவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக்கொலை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் உக்குவளையைச் சேர்ந்த ஒருவர் தலை மறைவாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​கொள்ளையிடப்பட்ட தங்கப் பொருட்களில் ஒரு பகுதி உக்குவலளையில் தங்கப் பொருட்கள் கொள்வனவு செய்யும் இடத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது..

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *