உள்நாடு

மர்ஹூம் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் நினைவு நிகழ்வு

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட கிளையின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் நினைவு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (23) மாலை புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் மஹ்மூத் ஹஸரத் மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் தமீம் (ரஹ்மானீ) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் அவர்கள் கலந்து கொண்டு விஷேட உரையினை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட ஜம்இயத்துல் உலமா தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், மத்ரஸா பரிபாலன சபையினர், உலமாக்கள், புத்தி ஜீவிகள் மற்றும் அப்துல்லாஹ் ஹஸரத்தின் குடும்ப உறுப்பினர்களும், காஸிமிய்யா மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் அவர்களுக்கு மத்ரஸா பரிபாலன சபை சார்பாக அல் ஹாஜ் எஸ்.ஆர்.எம்.முஸம்மில், கவிஞர் புத்தளம் மரிக்கார், புத்தளம் மாவட்ட ஜம்இயத்துல் உலமா தலைவர் மற்றும் உறுப்பினர்கள், புத்தளம் நகர ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ.ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள்,
ஜம்இயத்துல் உலமா புத்தளம் அக்கறைப்பற்று கிளை தலைவர் அஷ்ஷெய்க் எம். எம்.எம். மிஹ்லார் (நளீமி) மற்றும் அப்துல்லாஹ் ஹஸரத்தின் குடும்ப உறுப்பினர்களால் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(கற்பிட்டிச் செய்தியாளர் எம்.எச்.எம்.சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *