உள்நாடு

புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலை அதிபர், ஆசியர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு

புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கான கல்வி வழிகாட்டல் செயலமர்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மத்திய சம்மேளனம் மற்றும் புத்தளம் மாவட்ட சம்மேளனம் இணைந்து புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில புத்தளம் மாவட்ட செயலாளர் ஹேரத் தலைமையில் இடம்பெற்றது

மேற்படி செயலமர்வின் வளவாளர்களாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர்களான என்.நிலூபர், எம்.எஸ்.அலா அஹமட் , அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளன தேசிய தலைவர் எம்.ஆர்.எம்.ஸரூக், தேசிய பிரதித் தலைவரும் அஹதிய்யா பரீட்சை ஆணையாளருமான அஷ்ஷெய்க் யூ.எல் றிபாயுத்தீன், புத்தளம் ஆசிரியர் மத்திய நிலைய முகாமையாளரும் மாவட்ட சம்மேளன தலைவருமான எம்.எப்.எம்.
றியாஸ், அஹதிய்யா தகவல் தொழில் நுட்ப குழு உறுப்பினரும்,மாவட்ட வளவாளரும் சிலாபம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகருமான அஷ்ஷெய்க் ஐ.எம் தஹ்லான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான.எம்.எம்.இல்ஹாம், அஷ்ஷெய்க்
ஏ.எம்.எம்.இப்ஹாம், அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளன தேசிய பிரதிதி தலைவரும், மாவட்ட சம்மேளன பொதுச்செயலாளருமான பாரூக் பதீன், ஜம்மிய்யதுல் உலமாவின் புத்தளம் நகரக்கிளையின் தலைவர் அஷ்ஷெய்க்
ஜே.எம். ஜிப்னாஸ் , அஹதிய்யா அபிவிருத்தி பொறுப்பாளர் அஷ்ஷெய்க் எம்.இமாம்தீன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் செயலமர்வின் வளவாளர்களையும் ஏனைய விஷேட பிரதி நிதிகளுகளையும் பாராட்டி கௌரவிக்கும் முகமாக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட நகரக்கிளையினால் ஞாபகார்த்த சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *