உள்நாடு

றிஷாத் பதியுதீனின் தந்தையின் ஜனாஸா அஸர் தொழுகையின் பின்னர் நல்லடக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீனின் தந்தை பதுயுதீன் தனது 78 வது வயதில் திங்கட்கிழமை (17) இரவு காலமானார்.

மன்னார் உப்புக்குளத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது புத்தளம் தில்லையடி அல் மினாபுரத்தில் வசித்து வருகிறார். இவர் காலம்சென்ற அப்துல் றஹ்மான், மரியம் பீவியின் மகனும், ஹலீமத் ஸகிய்யாவின் கணவருமாவார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதுயுதீன், றியாஜ் பதியுதீன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் பாரிஷா பர்வின், பஸ்மிலா பர்வின் காலஞ்சென்ற பைறூஸா பர்வின் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா செவ்வாய்க்கிழமை (18) அஸர் தொழுகையை அடுத்து புத்தளம் ரத்மல்யாய அல் காசிமீ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *