உள்நாடு

இன்று வறண்ட வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (16) வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் குளிரான வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *