உள்நாடு

அதிகாலையில் பாணந்துறையில் கவிழ்ந்த பஸ்

ஐம்பது பயணிகளுடன் பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று அதிகாலை பாணந்துறையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொடிருந்த போதே இந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.

பேருந்தின் டயர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பஸ்ஸின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *