உள்நாடு

காத்தான்குடி பாத்திமா பாலிக்காவில் Clean Sri Lanka வேலைத் திட்டம் ஆரம்பம்..

அரசாங்கத்தினால் 2025 இல் ஆரம்பிக்கப்பட்ட “அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்” Clean SriLanka வேலைத்திட்டம் காத்தான்குடி மட்/மம/காத்தான்குடி பாத்திமா பாலிக்கா வித்தியாலத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் எம்.எம்.யூனூஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் முதற்கட்டமாக காலைக் கூட்டத்தில் Clean Srilanka நிகழ்ச்சித் திட்டம் சம்மந்தமாக மாணவர்களுக்கு விபரிக்கப்பட்டதுடன், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வும் இடம் பெற்றது.

(எம்.பஹத் ஜுனைட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *