உள்நாடு

அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த கழுதை மனிதன் நூல் வெளியீடும்.கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

இலங்கை நெய்னா சமூக நலக் காப்பகத்தின் ஏற்பாட்டில் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த கழுதை மனிதன் என்ற நூல் வெளியீடும். பாடசாலை மாணவர்களுக்கான
கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) பிற்பகல் 04 மணிக்கு மருதானை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான கவிஞர் அல் அஸூமத் தலைமையில் நடைபெற உள்ளது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் சிறப்பு அதிதியாக மையோன் நிறுவனத்தின் பணிப்பாளர் ரிஸ்லி முஸ்தபா கலந்து சிறப்பிக்க உள்ளதாக ஏற்பாட்டு குழுவின் தலைவர் இம்ரான் நெய்னார் தெரிவித்துள்ளார்.

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *