டேன் பிரியசாத் கைது
சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், இன்று (11) காலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிக்கவரெட்டிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.