மின்வெட்டு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மின்சாரத் தடைக்கு முதலில் குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் முன்னைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினையை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.
சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்காமல் இருப்பதும், குறைந்த தேவைக் காலத்தை நிர்வகிக்காத மோசமான நிர்வாகமே மின்வெட்டுக்கு முக்கிய காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.