உள்நாடு

கற்பிட்டி பள்ளிவாசல்துறை அல் கரம் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற கால்கோள் விழா

கற்பிட்டி பள்ளிவாசல்துறை அல் கரம் ஆரம்ப பாடசாலையில் தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா பாடசாலையின் அதிபர் எம்.ஆர்.எம் இர்பான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபர் எம் எச் எம் ஹமீட்கான், கிராம சேவையாளர் எப். றினோஸா,
பாடசாலையின் ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் எஸ்.எப் றவ்பியா, புத்தளம் வலயக் கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.எல்.கே காதர் மற்றும் ஏ.ஏ சுக்ரி, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி‌ நிருவாக சபை உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்,ஆசிரியர் மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *