ரமழான் காலத்தில் விசேட விடுமுறை; சுற்றறிக்கை வெளியீடு
இவ்வருடத்திற்கான ரமழான் மாதம் மார்ச் 1ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி முடிவடையவுள்ளதால் இக்காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகைக்களிலும் மதவழிபாடுகளிலும் கலந்துக் கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ரமழான் காலத்தின் போது உத்தியோகத்தர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் விசேட விடுமுறை வழங்கப்படலாம்.
மேலும், ரமழான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்பாக அரச சேவை கூட்டுத்தாபனங்களை, நியதிச் சபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு விழா முற்பணம் வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.