கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை
எட்டு ஆண்டுகளாக கோறளைப்பற்று மத்தி – வாழைச்சேனைப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகப் பணிபுரிந்து ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் எஸ்.எச்.முஸம்மிலுக்கு பிரியாவிடை நிகழ்வு கடந்த 31.01.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி.றமீஸா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், கணக்காளர் ஏ.மோகனகுமார், நிருவாக உத்தியோகத்தர் ஏ.தாஹிர், சமூர்த்தி பிரிவின் தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பஷீர், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எம்.நியாஸ், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் செயலகத்தின் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது, பிரதேச செயலாளருக்கு நினைவுச்சின்னமும் பரிசில்களும் வழங்கி, பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டடார்.
கடந்த 2017.11.01ல் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் கடந்த எட்டு ஆண்டுகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் கடமையாற்றியதுடன் 2025.02.03ம் திகதி ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)