எதிர்க் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்களுடனான முக்கிய கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார்.
நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவும், நன்மை பயக்கும் அரசாங்க முயற்சிகளை ஆதரிக்கவும், தீங்கு விளைவிக்கும் கொள்கைகளை
எதிர்ப்பதற்கும் ஒன்றுபட்ட எதிர்க்கட்சியின் அவசியத்தை சஜித் பிரேமதாச இதன்போது வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டு நடவடிக்கை தொட்பில் ஒருமித்த கருத்தை எட்டுவதே கூட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
நாடாளுமன்றக் குழுக்களின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துரைத்து, அதற்கேற்ப எதிர்கால நடவடிக்கைகளை
எடுப்பதற்கும் ஒப்புக்கொண்டார்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலைத்
தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி பெரேரா, ரிஷாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், ப.சத்தியலிங்கம், ஏ. காரியப்பர், வி. ராதாகிருஷ்ணன், அனுராதா ஜயரத்ன, டி.வி. சானகா, மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.