சீனன்கோட்டை ஷாதுலிய்யா கலா பீடத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின நிகழ்வு
இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேருவளை சீனன்கோட்டை ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் சுதந்திர தின நிகழ்வு 4 ஆம் திகதி கலாபீட முற்றவெளியில் நடை பெற்றது.
கலாபீட தலைவர் சட்டத்தரணி அல்-ஹாஜ் எம்.ஸி.எம் ஹம்ஸா, பணிப்பாளர் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி அல்-ஹாஜ் எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – பீ.ஏ) ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் அதிபர் மெளலவி அல்-உஸ்தாத் எம் அஸ்மிகான் (முஅய்யிதி) தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
தேசிய கொடி ஏற்றப்பட்ட பின் மாணவர்களினால் தேசிய கீதம் பாடப்பட்டதோடு. நாட்டின் சாந்தி, சமாதானம், சுபீட்சத்திற்காக பணிப்பாளர் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி அல்-ஹாஜ் எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – பீ.ஏ) துஆப் பிரார்த்தனை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கலாபீட வளவில் மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இணைப் பொருளாளர்களான அல்-ஹாஜ் முஸ்னி உவைஸ், ஜனாப் ரியாஸ் பாஸி நிர்வாக சபை உறுப்பினர்களான அல் ஹாஜ் பீ எம் முக்தார், ஜனாப் மொஹம்மட் ஷாஜஹான் மற்றும் பள்ளிச் சங்க உறுப்பினர்கள், கலாபீட நிர்வாகிகள், விரிவுரையாளர்கள், பழைய மாணவர்கள், கலாபீட மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் பங்குபற்றி சிறப்பித்தனர்.
(பேருவளை பீ.எம். முக்தார்)