போக்குவரத்து பொலிசாருடன் அர்ச்சுனா எம்.பீ வாக்குவாதம்
அனுராதபுரம் ரம்பாவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (20) பாராளுமன்ற அமர்வு க்காக கொழும்பு நோக்கி பயணித்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசேட அதிதிகளுக்கான விளக்குகளை பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனம் செலுத்தியதாக அவரது வாகனத்தை பொலிசார் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் தை கோரியுள்ளனர்.
இதன் போது ஆவணங்களை வழங்காது போக்குவரத்து பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியதுடன் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் பொலிசாருன் நடந்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)