உள்நாடு

கற்பிட்டி இந்து இளைஞர் சேவை மன்றத்தின் தைப் பொங்கல் விழா

கற்பிட்டி இந்து இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் கற்பிட்டி ஸ்ரீ வேல் முருகன் ஆலய நிர்வாகத்தின் அனுசரணையில் ஞாயிற்றுக்கிழமை (19) ஆலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா

கற்பிட்டி இந்து இளைஞர் சேவை மன்றத்தினால் அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே கலை கலாசார விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளின் நெறிப்படுத்தலுடன் பெற்றார்களின் பங்களிப்புகளுடனும் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா சிறப்பு பூஜையினை கற்பிட்டி ஸ்ரீ வேல் முருகன் ஆலய பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ வரதேஸ்வரக் குருக்கள் நடாத்தியதுடன் ஆசியுரையினையும் நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *