நிதிக் குழு உறுப்பினர்களாக சாணக்கியன், அர்ஹம்
நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் அர்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்பு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த நியமனங்கள் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்.