உள்நாடு

அரபு தின நிகழ்வும்; நூல் வெளியீடும்.

உலக அரபு தினத்தை முன்னிட்டு அக்குறனை றஹ்மானிய்யஹ் அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான நத்வதுர் ரஹ்மானிய்யீன் அமைப்பினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2014.12.15 ஆம் திகதி கல்லூரி கேட்போர் கூடத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் முப்தி யூஸுப் ஹனீபஹ் (றஹ்மானி) தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக ஷைகுர்ரஹ்மானிய்யஹ் அல்ஆலிம் ஜிப்ரி ஹழரத் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் விஷேடமாக பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் அஷ்ஷைக் அப்துல் நாஸர் (றஹ்மானி) அவர்கள் எழுதிய ” ஷதாஉல் மிஸ்க் ” என்று அரபுக்கவிதை நூல் வெளியிடப்பட்டதுடன், நூல் விமர்சனத்தை கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுத்தலைவரும் நிகழ்வின் விஷேட அதிதியுமான அஷ்ஷைக் ஹிஷாம் (பத்தாஹி) அவர்கள் நிகழ்த்தினார்.

கல்லூரி மாணவர்களின் நிகழ்ச்சிகளும் அரங்கேறிய இவ்வைபத்தில் ஆலிம்கள், தனவந்தர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வுகளை அரபியில் கல்லூரி உஸ்தாத் அஷ்ஷைக் இஜ்லான் (றஹ்மானி) அவர்களும், தமிழில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர் பஸ்ஹான் நவாஸ் அவர்களும் தொகுத்து வழங்கினர்.

-எம்.றமழான் மர்ஸூக் (றஹ்மானி),
நெல்லியகம.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *