ஈராக் தூதரக நிகழ்வில் சஜித் பிரதம அதிதி
இலங்கை மற்றும் ஈராக் குடியரசு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள ஈராக்கிய தூதரகத்தினால் (10) கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஈராக் குடியரசால் நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் Anmar A. A. Al-Emin அவர்களின் கெளரவ அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.









