உள்நாடு

சீனன்கோட்டை ஷாதுலிய்யா கலா பீடத்தில் நடைபெற்ற உலமாக்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு

பேருவளை சீனன்கோட்டை ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் உலமாக்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு 11ஆம் திகதி (2024-12-11) புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சீனன்கோட்டை பள்ளிச் சங்க வழிகாட்டலின் கீழ் ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட நிர்வாகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இச் செயலமர்வு கலாபீட பாஸிய்யா மண்டபத்தில் பள்ளிச் சங்க இணைச் செயலாளரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான அஷ்ஷெய்ஹ். அல்-ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) தலைமையில் நடைபெற்றதோடு அவர் ஆரம்ப உரையும் வரவேற்புரையும் நிகழ்த்தினார்.

டாக்டர். ரயீஸ் மீரா பயிற்சி செயலமர்வை நடாத்தியதோடு பணிப்பாளர் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி அல்-ஹாஜ் எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி பீ.ஏ) ஆத்மீக பயிற்சி வழிகாட்டல்கள் என்ற தலைப்பிலும், அதிபர் அல் உஸ்தாத் மெளலவி. எம் அஸ்மிகான் (முஅய்யிதி) நன்றி உரையும் நிகழ்த்தினார்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிவாசல்கள், ஷாதுலிய்யா ஸாவிய்யாக்கள், சீனன்கோட்டை குர்ஆன் மதாரிஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள. குர்ஆன் மத்ரஸாக்களில் கடமை புரியும் உலமாக்கள், முஅல்லிமாக்கள், ஏனைய உலமாக்கள், முகத்தம்கள் என பலரும் பங்குபற்றினர்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் அல்-ஹாஜ் எம்.எம்.எம் சிஹாப் உட்பட உறுப்பினர்கள், ஜாமியத்துல் பாஸியத்துஷ் ஷாலுலிய்யா கலாபீட நிர்வாக சபை உறுப்பினர்கள் பங்குபற்றினர்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *