பின்னால் வந்த வாகனம் மோதி ஒருவர் பலி; கற்பிட்டி ஆன்டாங்கன்னியில் சம்பவம்
பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கி தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை பின்னால் அமர்ந்திருந்த மகன் தவறுதலாக மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே வீழ்ந்துள்ள நிலையில் பின்னால் வருகைத் தந்த வாகனம் விபத்தை ஏற்படுத்தியதில் குறித்த இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் நுரைச்சோலை ஆண்டாங்கன்னி பகுதியில் திங்கள்கிழமை (9) இரவு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞர் கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன் போது தெரிவித்துள்ளனர்.


(ஏ.என்.எம். முஸ்பிக் – புத்தளம் )