உள்நாடு

பதவிய சூட்டுச் சம்பவம்; மேலும் இருவர் கைது

பதவிய போகஹவெவ பகுதியில் கடந்த (05) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன்  தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்துள்ளதாக பதவிய பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மஹியாங்கனை மற்றும் எஹடுகஸ்வெவ பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 30 வயதுடைய இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கிரியிப்பன்வெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் புல்மோட்டை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் வெலிஒயா பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து T ரக துப்பாக்கி மற்றும் ரிவோலர் கைப்பற்றப்பட்டுள்ளதோடு நீதிமன்ற உத்தரவைப் பெற்று பொலிஸ் தடுப்பில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெலிஓயா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்காக மோட்டார் சைக்கிள் சென்ற துப்பாக்கி தாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வரும் பிரதான சந்தேக நபரிடமிருந்த T56 ரக துப்பாக்கி குறித்த கொலைக்கு பனண்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பதவிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *