ஹுசைன் டீன் பாத்திமா ரிஹ்லா எழுதிய “பொங்கி எழும் கடல்” புதுக்கவிதை நூல் வெளியீடு
பாணந்துறை ஜீலான் தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பில் பயிலும் மாணவி ஹுசைன் டீன் பாத்திமா ரிஹ்லா எழுதிய ‘பொங்கி எழும் கடல்’ புதுக்கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு) ஜீலானின் உம்முல் மலிஹா நினைவு மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி கல்லூரி அதிபர் ஹலீம் ஏ மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாணந்துறை எப். ஆர். நிறுவன பணிப்பாளர் பௌசான் சபீக் பிரதான அதிதியாகவும் ஆர்.ஜே. ஊடகவலையமைப்பின் ஸ்தாபகர் ஏ.எம். இன்சாப் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு முறையே நூலின் முதலாம் இரண்டாம் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். பிரதி ஆசிரியை நிஷாந்தி சி. பிரியராம்யன் கவிதை வாழ்த்துப் பாடினார்.



(பேருவளை பீ.எம் முக்தார்)