துப்பாக்கி சூட்டில் பெண்ணொருவர் பலி.
பதவிய போகாவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிசார் தெரிவிப்பதுடன்.இறந்து போன பெண் அவரது வீட்டிற்கு அருகில் இருந்த போது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பதவிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)