உள்நாடு

கவிஞர் எம்.ஏ.எம். ஆறுமுகம் நினைவரங்கில் வலம்புரி கவிதா வட்டத்தின் 106 ஆவது கவியரங்கு

வலம்புரி கவிதா வட்டத்தின் 106 ஆவது கவியரங்கம் இம்மாதம் 14 ஆம் திகதி (14/12/2024) சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெறும். கவிஞர் எம்.ஏ.எம். ஆறுமுகம் நினைவரங்கில் இடம்பெறும் கவியரங்கிற்கு கவிஞர் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் தலைமைத் தாங்குவார். ஸ்தாபக உறுப்பினர் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனி முன்னிலை வகிப்பார்.

கவியரங்க ஏற்பாடுகளை வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், பொருளாளர் ஈழகணேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *