பாராளுமன்றம் நாளை இரவு 9 மணிவரை நடைபெறும்
பாராளுமன்றம் நாளை இரவு 9.00 மணி வரை நடைபெறும் என சில நிமிடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளை மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூடிய போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.