சம்மாந்துறை அனர்த்த நிலைமைகள் தொடர்பில் இடம்பெற்ற விஷேட கூட்டம்.
திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய சம்மாந்துறையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமைகளை ஆராயும் கூட்டம் பிரதேச செயலாளர் எஸ் எல் எம். ஹனீபா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்றது
இதன் போது உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அரச திணைக்களங்களின் முக்கியஸ்தர்கள் பொது நிறுவனங்களின் தலைவர்கள்,பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் சமகால அனர்த்த நிலைமைகள் தொடர்பிலும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

