உள்நாடு

கோமரங்கல்ல விபத்தில் பாதசாரி பலி

கல்கிரியாகம பொலிஸ் பகுதிக்குட்பட்ட புப்பேகமவில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கல்கிரியாகம புப்பேகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கி காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிசார் தெரிவித்தனர்.


(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *