Tuesday, August 12, 2025
Latest:
உள்நாடு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை; ஏற்பாடுகள் பூர்த்தி

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கு தேவையான அனைத்து தேர்தல் உத்தியோகத்தர்கள், வாக்கு சீட்டுகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் இன்று அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

48 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், 2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பட்டியலின்படி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நாளை (ஒக்டோபர் 26) காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *