உள்நாடு

அனுராதபுர நகரில் சிறுவர்களை தாக்கிய விடுதிப் பொறுப்பாளர் கைது.

அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள விசேட தேவையுடையோர் பாடசாலையின் விடுதியில் வசிக்கும் சிறுவர்களை தாக்கியதாக கூறப்படும் விடுதியின் காப்பாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதியில் வசித்து வரும் 10 _ 15 வயதிற்குட்பட்ட செவித்திறன் குறைபாடுடைய ஏழு சிறுவர்களை குறித்த காப்பாளர் தடியினால் தாக்கியுள்ளதாக பெற்றோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அனுராதபுரம் தலைமையக பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான சிறுவர்களை சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *