உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக நீரில் மூழ்கியது பிரதான வீதி வாகனப் போக்குவரத்து தடை

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக புத்தளம் மாவட்டத்தின் நாதாண்டிய மற்றும் அதை அண்டிய பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக நாத்தாண்டிய – நீர் கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பிரதான வீதியில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. அத்துடன் வளமையான சில ரயில் போக்குவரத்து சேவைகளும் தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மக்கள் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளமையால் அவர்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.கொட்டராமுல்லை மற்றும் தும்மோதர முஸ்லிம் பாடசாலைகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(முஸ்பிக் – புத்தளம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *