விளையாட்டு

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ரி20 போட்டியில் ஆடும் இலங்கை பதினொருவர் அணி அறிவிப்பு

சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணி எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் நாளை இடம்பெறவுள்ள முதல் போட்டிக்கான இலங்கை ஆடும் பதினொருவர் அணி இன்று (12) அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை வந்துள்ளது. அதில் முதலில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி நாளை (13) இரவு 7 மணிக்கு தம்புள்ள ரங்கிரி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இப் போட்டியில் பங்கேற்கவுள்ள 11 வீரர்கள் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சரித் அசலங்க தலைமையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக குசல் மெண்டிஸ் மற்றும் பெத்தும் நிசங்க ஆகியோர் பெயறிடப்பட்டுள்ளனர். அடுத்து அனுபவமிக்க அதிரடித் துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா, மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அத்துடன் சகலதுறை வீரர்களாக கமிந்து மென்டிஸ், வனிந்து ஹசரங்க மற்றும் சமின்டு விக்ரமசிங்க ஆகியோர் உள்ளவாங்கப்பட்டுள்ளனர். மேலும் சுழற்பந்து வீச்சாளராக மகேஷ் தீக்கச உடன் வேகப்பந்து வீச்சாளர்களாக மதீஷ பத்திரண மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *