உள்நாடு

மாவனல்லை உத்துவன்கந்தபஸ் விபத்தில் 18 பேர் காயம்

கண்டி -கொழும்பு பிரதான பாதையின் மாவனல்லை உத்துவன்கந்த வில் நேற்று (11) இடம்பெற்ற பஸ் விபத்தில்18 பேர் காயமடைந்த நிலையில் மாவனல்லை மற்றும் கேகாலை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.


கேகாலையிலிருந்து மாவனல்லை நோக்கி வந்த இ.போ.ச பஸ்ஸின் பின்புறத்தில் பாணந்துறையிலிருந்து கண்டி நோக்கி வந்த இ.போ.ச.பஸ் மோதியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *