உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் கண்டி தமிழ் வேட்பாளர் கலாநிதி சிவப்பிரகாசம் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார்

தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டத்திற்கான வேட்பாளர்கள் வேற்புமனு தாக்கல் செய்த நிலையில் நேற்று தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டத்திற்கான தமிழ் வேட்பாளர்
கலாநிதி. பி. பி. சிவப்பிரகாசம் அவர்கள் கண்டி பிள்ளையார் கோவிலில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார்.

மேற்படி வரவேற்ப்பு வைபவத்தை கண்டி பிள்ளையார் கோவில் தர்மகருத்தா திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயாவும் கண்டி பிரபல வர்த்தகர் மோகன் அவர்களும் மற்றும் சமூக வர்த்தகர்கள் பலரும் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் அவர்களை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திரு. மோகன் அவர்களும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கருத்து தெரிவிக்கும் போது, மலையகத்தின் சிறந்த கல்வியாளரும், மனித உரிமை செயட்பாட்டாளரும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தருமான கலாநிதி. பி. பி. சிவப்பிரகாசம் அவர்கள் கண்டி மாவட்ட வெற்பாளராக தெரிவு செய்யப்பட்டமை கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த நல்லேதொரு சந்தர்ப்பமாகும்.

இதை பயன்படுத்தி அவரை வெற்றியடைய செய்யுமாறாரு அனைவரையும் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *