உள்நாடு

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி நாய்களின் சாகச காட்சி.

அக்குறணை பிரதேச செயலகத்தின் சிறுவர் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸ் பிரிவினால் பொலிஸ் நாய்களின் சாகசக் கண்கண்காட்சி அக்குறணை அல் அஸஹர் தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் அக்குறணை பிரதேச செயலாளர் ருவன்திகா குமாரி ஹென்நாயக அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் விசேடமாக அக்குறணை பிரதேசத்திலுள்ள சகல முன்பள்ளிப் பாடசாலை சிறார்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டதுடன் இதில் ஐடெக் கல்வி நிலையத்தின் இயக்குனர் ஐ. ஐனுடீன் உள்ளிட்ட பல முக்கிய ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *