உள்நாடு

குருநாகல் கும்பலங்கை ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பிரதேசத்தில், கும்பலங்கை ஹமீதியா மகா வித்தியாலயத்தில் நிலவுகின்ற வகுப்பறை இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக குவைட் நாட்டுப் பிரதிநிதியுடன், குவைட் தூதுரக அனுசணையுடன், அல் – ஹிமா இஸ்லாமிய சேவை அமைப்பின் ஊடாக புதிய இரண்டு மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் எஸ். எம். எம். அதிபர் இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்கிழ்வில் விடேச அதிதிகளாக அல் – ஹிமா இஸ்லாமிய சேவை அமைப்பின் செயலாளர் அ~;n~ய்க் அல்- ஹாஜ் எம். ஏ. ஏ. நூருல்லாஹ் மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் எம். எம். முஹமட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கும்பலங்க கல்வி, கலாசார சமூக நல அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏ. எல். எம். நௌபர், ஊர் பிரமுகர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *