உள்நாடு

கற்பிட்டி, ஆனைவாசல் அருள்மிகு சிறி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு இன்று

கற்பிட்டி, ஆனைவாசல் அருள்மிகு சிறி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ திருமுகமும் மகா நவராத்திரி விழாவும் கடந்த 2024/10/03 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்று (09) இரவு 08.30 மணிக்கு தீ மிதிப்பு இடம்பெறும் என ஆலய நிர்வாக சபையின் தலைவர் ஜி. குபேந்திரன் தெரிவித்தார்

தினசரி மாலை 05: மணிக்கு ஸ்நபனம், அபிஷேகம், அலங்காரம், வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *