உள்நாடு

யானை சின்னத்தில் களமிறங்கும் இ.தொ.க

நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இ.தொ.கா அறிவித்துள்ளது.

இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் ப.சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களில் கூட்டணியின் சின்னத்தின் கீழ் போட்டியிடவும் இ.தொ.கா தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கட்சியின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *