உள்நாடு

முன்னாள் பா.உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட முத்திரைகளை மீள ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் அறிவித்துள்ளது

அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்ட அனைத்து பயன்படுத்தப்படாத முத்திரைகளையும் மீள ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களால் பயன்படுத்தப்படாத முத்திரைகள் பெறப்பட்டு பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறான முத்திரைகளை பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனவும் தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *